CT

அண்மை பதிவுகள்

எண்ணத்துணுக்குள் 3 || lines of vignesh

மனதை விட்டு பிரியாத ஒன்றில்
தான் மதியும்,மனதும்
மயங்கி கிடக்கும்.

தூக்கம் தரும் கனவுகளில்
கலையாத மேகத்தினுள் ஒளிந்திருக்கும் நிலவு போல அவள் முகம் மறைந்துள்ளது... கனவின் முடிவிற்குள் மேகம் கலைந்து அவள் மதிமுகம் காண்பேனா... இல்லை மேகத்தோடு சேர்ந்து கனவும் கலையுமா...

பிரியாத வரம் வேண்டும் அன்பிற்குரியவர்களை...

உன் விழி கண்ட தருணம் முதல்...
உன்னை விரும்புகிறேன் என்று நினைக்கிறேன்...

செவ்விதழ்வாய் மலர்ந்து...
பிறை இதழ் சிரிப்பு சிரித்து...
விழிமொழியால் உயிரை தின்று...
கற்பனையின் களிப்பில் கதைக்கவிட்டாயே விழியழகே

ரதியின் ரசிக்கத் தூண்டும்
இரு  விழிகளை ரகசியமாக காண்பதில் ரசிகனுக்கு
ரெட்டை மகிழ்ச்சி...

மயங்கும் மாலைப்பொழுதினிலே
விழிகள் உன்னைக் காண துடிக்க...
செவிகள் உன் பேச்சைக் கேட்க...
மனதும் ஆவலாய் உன்னை சந்திக்க வந்தது...
நீயோ எஙகே சென்றாய்..?

கவிதைக்குள்..
மனம் கரைந்து போகச்செய்யும் வரிகள்...
இரவினில் கற்பனை வானை தம் வசமாக்கும் வரிகள்...
வழி(லி)களைக் கொடுக்கும் வரிகள்...
ஒருவித போதையை தருவிக்கும் வரிகள்...
காதல் மழை பொழியும் வரிகள் என கவிதைக்குள் பயணம் செய்கின்றன...

ஓர் உலவிரவில் நாம் வானத்து விண்மீன் கூட்டங்களை  பார்த்து ரசித்துக்கொண்டிருக்க யாருமில்லா அவ்வெளியில்... நம் இதழ்கள் பதித்துக்கொண்ட தருணம்
மீண்டும் கிடைக்குமோ.... ஓர் உலவிரவு

நிராகரிப்பு..
ஒரு வகையில் புதியதொரு சிந்தனையை தூண்டக்கூடியது.

தேவதை பூங்கொத்தோடு உன் முன்னே காதல் சொல்ல வந்து நின்னாலும்...
அவள் மேல் உன் காதல் இல்லை என்றால்... அத்தேவதையும் ஒருதலைக்காதலியாக நேரிடும்...

குறை'கள்' இருந்தால் என்ன அதிலும்
சிறு போதை உள்ளதே ...மகிழ்ந்திடு.

உன்னை கண்டதும் என் ஐவிரல் உன் இடை பிடித்து... நாவிதழ் சண்டை போட அழைக்கிறது.
விழியின் விருப்பத்திற்கேற்ப விழித்து  விடியலை வரவேற்றாளாம் கயல்விழியாள்...

உன்னை மறக்கும் கணங்கள் என்னிடமில்லை...
ஏனென்றால் என் மூளை அந்நினைவுகளை
சேமிப்பதில்லை...
உன்னை நினைக்கும் கணங்கள் மட்டுமே மூளையில்
பதிவாகின்றன...

கயல்விழியாளின் பார்வை அம்பால் என்னை துயில் கொள்ளச் செய்து கனவில் கற்பனைக்கு மிஞ்சிய பயணத்தை தொடர வைக்கிறாள்...
எழிலானவள் என் கரம் பிடிக்க
நான் அவள் சேவகன் ஆனேன்...

ஒலியின் இடைப்பட்ட
சப்தமற்ற மௌனமே
அனைவருக்கும் இசையை
தந்து உணர்வுகளையும்,
நினைவுகளையும் தூண்டுகிறது...

(ஒலியின் இடைவெளியில்
மௌனம் இல்லையென்றால்
இரைச்சலாகிவிடும்...)

அவளின் எழில் விழி கண்டநான் முகம் கண்டதில்லை....
அணு தினமும் அவளின் விழி என்னை அவளுடன் கற்பனையில் பயணிக்க வைக்கிறது...
இவளுடனான கற்பனை உறவில் பயணிக்கும் பயணமே மனதிற்கு ஆர்பரிக்க வைக்கும் உணர்வை உள்ளூற தூண்டுகிறது...

அவனெனும் நிலவில்..
அவன் நன்கு பிரகாசிக்க...
அவளின் விழி ஒளியை
கடன் வாங்க வேண்டியுள்ளது....
சுட்டுவிடும் தென்றல்...
உன் தேகம் தீண்டி வரும் நொடியில்...

கன்னத்து முத்தமொன்றில்..
காதலை ஈரிதழ்  வாயிலாக தெரிவித்தால்...
அவள் கருவிழியாள் கருமை இரவு பகலானது... ஆதலால் என் துயில் போனது... எனினும் என் விழி களைத்து போகவில்லை அவ்விழியாளை விழித்து பார்த்துக்கொண்டே இருப்பதினால்...

ஓரிசைக்கு செவி சாய்க்கும் ஈருடலின் இதயம் எண்ணுவது என்னவோ...!

நினைவின் விளிம்பில்...
சிறகடித்துக்கொண்டிருக்கும் ஒரு உறவினால் சிறிய இதயம் சிறப்பாக இயங்கி வருகிறது...

இரவின் மை இருட்டில் இனியவள் என்னருகே வந்தாள் இனிய இரவு வணக்கம் கூற...
அவள் கூறிய வணக்கத்தில் என் இரவு துயிலின்றி அவளை எண்ணி திளைத்துக்கொண்டிருந்தது...

மீண்டும் மீண்டும்..
ரசிக்கத் தூண்டும் சித்திரப் பாவையடி நீ...

ஒரு காலையில்
மதிமயங்கிய
மதி நினைத்தது வெண்மதி எங்கே என்று....

அழகு என்பது.. அவரவர் செயல்களில் வெளிப்படுவது...

-விக்னேஷ்

No comments