CT

அண்மை பதிவுகள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் அற்புத வரிகள்

 

நீங்கள் எதையும் எளிமையாக விளக்க முடியாவிட்டால் அதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.


வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றி மீது உள்ள தாக்கத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக்கூடாது.


அறிவை விட கற்பனை முக்கியமானது.




மனித குலத்தின் சிறந்த தார்மீக ஆசிரியர்கள் ஒருவகையில் வாழ்க்கை கலையில் கலை மேதைகளாக இருந்தனர்.


ஒரு பிரச்னை எந்த வழியில் ஏற்பட்டதோ , அதே வழியில் அதற்கான தீர்வை பற்றி யோசிக்கும் போது நம்மால் அதை தீர்க்க முடியாது.


ஒரு விஷயம் அழகாக பார்க்கப்படுவதால்தான் மட்டுமே அதனை பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது.


ஒருபோதும் தவறு செய்யாத எவரும் புதியதை முயற்சித்ததில்லை.


அனைத்து மதங்களும் கலைகளும் அறிவியல்களும் ஒரே மரத்தின் கிளைகள்.


தண்டனையின் பயம் மற்றும் மரணத்திற்கு பிறகு வெகுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றால் மனிதன் உண்மையில் இன்னும் மோசமான வழியில் சென்றிருப்பான்.


எனக்கு சிறப்புத் திறமைகள் இல்லை நான் உணர்ச்சிவசப்படுகிறேன்.



ஒரு மனிதன் பல தடைகளையும் பல போராட்டங்களையும் தன்னிலும் வெளியேயும் எதிர் கொள்ள முயற்சிக்கும் போதே அவன் உயிர் உள்ளவனாஅல்லது இறந்தவனா என்று வெளிப்படுகிறது.



முட்டாள்களுக்கும் மேதைகளும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மேதைகள் எப்போதும் அவர்களின்  எல்லை என்னவென்று அறிந்தவர்கள்.


ஒருவன் நன்றாக முன்னாள் தாண்டிக்குதிக்க வேண்டுமென்றால் அதற்காக அவன் பின்னாலும் போகத்தான் வேண்டும்.


துன்பங்களுக்கு   இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன.


மனிதன் நிச்சயம்  ஒரு பைத்தியக்காரன் தான்.அவனால் ஒரு புழுவை கூட உண்டாக்க முடியாது, ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கி கொண்டே இருப்பான்.


பள்ளியில் தான் கற்ற அனைத்தையும் மறந்துவிட்ட பின்பும்  ஒருவனிடம் எஞ்சியிருப்பது  எதுவோ அதுவே அவன் கற்ற கல்வி.


அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது . அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.


வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.


தொழில் நுட்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால் நிறைந்திருக்கும்.


இயற்கையை ஆழமாக பாருங்கள் பின்னர் நீங்கள் எல்லாவற்றையும் நன்றாக புரிந்து கொள்வீர்கள்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

No comments