CT

அண்மை பதிவுகள்

நேர்மை...


tamil quotes
நேர்மையால் பலரை நீ
நிரந்தரமாக இழக்கலாம்...
ஒரு போதும் உன்னுடைய
நிம்மதியை இழக்கமாட்டாய்...

பொய்யுரைத்து பலபேரால் நீ
பகட்டு இன்பம் பெற்றிடலாம்...
ஒருபோதும் நிம்மதியை
உன்னால்பெற முடியாது...

நேர்மையய்ப்போல் சிறந்ததோர் கவசமில்லை..!
மனசாட்சியை விட மிகப்பெரிய கடவுளுமில்லை..!

என்றும் எழுத்தாணி முனையில்...?

- கவிஞர் செந்தமிழ்தாசன்

கவிஞன்...

சோல்னாப்பை தூக்கிதிரியும்
கவிஞனல்ல நான் - சுக
துக்கங்களைத் தூக்கிதிரியும்
கவிஞனடா நான் ...

கவிஞனென்ற கர்வத்தை
என்எழுத்தில் பதிப்பேன் - என்
கவலைகளை பிறரறியா
ஆடையில் மறைப்பேன் ...

பார்ப்பதற்கு பகடாய்தான்
என்னைத் தெரியும் - இது
பகல்வேடம் என்றெந்தன்
வலிக்கேபுரியும் ...

நான்கடந்த வறுமைகளை
என்காலம் அறியும் - அது
நாளுக்குநாள் வளமைபெறும்
என்கவியில் நிறையும் ...

என்றும் எழுத்தாணி முனையில் ...
-கவிஞர் செந்தமிழ்தாசன்

 

No comments