CT

அண்மை பதிவுகள்

கவிஞன்...

சோல்னாப்பை தூக்கிதிரியும்
கவிஞனல்ல நான் - சுக
துக்கங்களைத் தூக்கிதிரியும்
கவிஞனடா நான் ...

கவிஞனென்ற கர்வத்தை
என்எழுத்தில் பதிப்பேன் - என்
கவலைகளை பிறரறியா
ஆடையில் மறைப்பேன் ...

பார்ப்பதற்கு பகடாய்தான்
என்னைத் தெரியும் - இது
பகல்வேடம் என்றெந்தன்
வலிக்கேபுரியும் ...

நான்கடந்த வறுமைகளை
என்காலம் அறியும் - அது
நாளுக்குநாள் வளமைபெறும்
என்கவியில் நிறையும் ...

என்றும் எழுத்தாணி முனையில் ...
-கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments