CT

அண்மை பதிவுகள்

இடி இடிக்கும் போது அர்ஜுனா சொல்வது ஏன்...

நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும் அர்ஜுனா... அர்ஜுனா... என்பார்கள் பெரியவர்கள்.
உடனே நம் வீட்டு இளசுகள் நீ அர்ஜுனா சொன்னதும், அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து இடி சத்தமே இல்லாம பண்ணிடப்- போறானாக்கும் என கேலி செய்வார்கள்.

இடிதாங்கி கண்டுபிடிச்சு எத்தனையோ வருசமாகியும், அத இன்னும் பில்டிங்க் மேல வைக்காம இப்படி புலம்பிட்டு இருக்கியே! என்று அறிவியலை எடுத்துச் சொல்வார்கள்.

உண்மையில் அர்ஜுனா என்பதில் அறிவியல் காரணம் உள்ளது என்ன தெரியுமா?
இடி பலமாக இடிக்கும் போது பலரது காதுகள் அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும் காது அடைக்காது.
"அர்" என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையை தொடும்.
"ஜு" என்று சொல்லும் போது, வாய் குவிந்து உள்ளிருந்து காற்று வெளியேறும்.
"னா" என்று சொல்லும் போது, முழுமையாக வாய்த் திறந்து காற்று வெளியே போகும்.

இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதனால் தான் அர்ஜுனாவை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.
அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மீக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்தது.

- குறுந்தகவல்

No comments