CT

அண்மை பதிவுகள்

சிந்தனை துணுக்குகள் || இளா





மரணித்தாலும் மறையாத உன் நினைவுகளுக்கு மத்தியில்...
எப்படி உன்னை மறந்து வாழ முடியும்..!

எங்கு பார்த்தாலும் உந்தன் நினைவுகள் மட்டுமே தெரியுதடி,
நான் அதிகம் பேசிய வார்த்தைகள் எல்லாம் உன் பெயர்தானடி,

அதனால் தான் இன்றும் உயிர் வாழ்கிறேனடி...!  

உன்னை பிரிந்தும் நான் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றேன்...
நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்று உன்னை கடந்து வருவதால்..!

காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி மறுக்கபட்ட நீதிக்கு சமம்
நீதி மட்டும் இல்லை காதலும் தான்...

நான் ஒவ்வொரு முறையும் என் காதலை உன்னிடம் சொல்லும் போதும்...
நீ நிராகரிப்பது எந்தன் காதலை மட்டும் அல்ல...
அதனுடன் சேர்ந்து உந்தன் அழகான வாழ்க்கையும் தான்..!

-இளா

No comments