CT

அண்மை பதிவுகள்

உன் விழி பார்வையிலே...|| கோகுல்


உன்னை நான் பார்த்தேனே
என்னை நான் மறந்தேனே
உன் விழி பார்வையிலே...
சின்னதாய் சிரிப்பிருக்கு
கொள்ளை கொள்ளும் மனசிருக்கு
வேஷம் போடத் தெரியாதவளே

எங்கே போனாய் நீ... என் கண்முன்னே நீ இல்லையடி...
என்னை வென்றாய் எங்கோ சென்றாய் நீ இல்லாமல் மனம் வலிக்குதடி..

உன் ஹார்ட்-க்குள் தொலைந்து போனேன்...
பார்க்காமல் மெலிந்து போனேன்... இனிப்பு கூட கசக்குதடி... (2)

காதல் சொல்ல வந்தேனே... உன்னைப் பார்த்து பயந்தேனே... கண்ணில் தீயை வைத்து என்னை பொசிக்கிவிட்டாய்... (2)

காற்றுக்கு வடிவம் இல்லை..
உந்தன் பாசத்துக்கு அளவே இல்லை...
கவிதை சொல்ல நேரமில்லை..
அதை கேட்க உனக்கு ஆர்வமில்லை (ஆவலில்லை)

காலை,மாலை இரவு வேளை உன்னுடன் பேச நேரமில்லை...
உன்னை பார்த்த அந்த வேளை பறித்துக் கொடுப்பேன் அழகிய பூவை...
பூக்களைப் பார்த்தாலே உந்தன் நியாபகமே... அந்த பூக்களும் வாடி விட்டால்...


உன்னை நானும் தேடி அலைந்தேன்... காதல் சொல்ல வந்தேனே... உன்னைப் பார்த்து பயந்தேனே... கண்ணில் தீயை வைத்து என்னை பொசிக்கிவிட்டாய்... (2)
-கோகுல்

No comments