CT

அண்மை பதிவுகள்

பிழை...

tamil_lines images

கானல்நீரைக் கண்டுருகி
கரையொதுங்கி மீனைப்போல்
எனைவிட்டுப் பிரிந்ததில்
என்னவளும் அடங்குவாள்


எட்டிநின்று பார்த்தபோது
என்திறனை ரசித்தவள்
கட்டிக்கவா என்றபோது
காசில்லையே ஒதுக்கினாள்

அன்றைக்கு வறுமையில்
அவளையிழந்து நான்துடித்தேன்
இன்றைக்கோ அவ்வலியில்
இமயமளவு எழுதிக்குவித்தேன்

அன்றைக்கு வெல்லாதிறமை
இன்றைக்கு வென்றது
அன்றைக்கு இல்லாகாசு
இன்றைக்கு வந்தது

அன்றைக்கு அவளைநான்
இழந்துநின்றது காலப்பிழை
இன்றைக்கு என்னையவள்
இழந்துநிற்பது அவளின்பிழை

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️




-கவிஞர் செந்தமிழ்தாசன்


No comments